முத்தலாக் முறையில் விவகாரத்து செய்யும் சிவில் பிரச்சனையை கிரிமினல் குற்றமாக மாற்றி முஸ்லிம்கள் மீது தாக்குதல் தொடுக்கும் “முஸ்லிம்பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) மசோதா, மாநிலங்களவையில் செவ்வாயன்று நிறைவேறியது. இதன்மூலம் இம்மசோதாவை நாடாளுமன்றத்தில் பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது.